27.6.08

கணவாயைக் கடக்காதோருக்கு எப்பக்கமும் மூடப்பட்ட நெருப்பு



Sura Al-Balad (1 - 20)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (90:1)

وَأَنتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், (90:2)

وَوَالِدٍ وَمَا وَلَدَ

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, (90:3)

لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். (90:4)

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? (90:5)

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான். (90:6)

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? (90:7)

أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? (90:8)

وَلِسَانًا وَشَفَتَيْنِ

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (90:9)

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். (90:10)

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. (90:11)

وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். (90:12)

فَكُّ رَقَبَةٍ

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்- (90:13)

أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ

அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். (90:14)

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

உறவினனான ஓர் அநாதைக்கோ, (90:15)

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). (90:16)

ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். (90:17)

أُوْلَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். (90:18)

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ

ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். (90:19)

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. (90:20)

No comments: