22.8.08

இறை வரம்பை மீறுதல், குழப்பத்தை ஏற்படுத்துதல் இறை வேதனையை கொண்டுவரும் செயல்கள்


Sura Al-Fajr (1 - 30)

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

وَالْفَجْرِ

விடியற் காலையின் மீது சத்தியமாக, (89:1)

وَلَيَالٍ عَشْرٍ

பத்து இரவுகளின் மீது சத்தியமாக, (89:2)

وَالشَّفْعِ وَالْوَتْرِ

இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக, (89:3)

وَاللَّيْلِ إِذَا يَسْرِ

செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக, (89:4)

هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ

இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா? (89:5)

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (89:6)

إِرَمَ ذَاتِ الْعِمَادِ

(அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள், (89:7)

الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ

அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. (89:8)

وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) (89:9)

وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ

மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?) (89:10)

الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ

அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர். (89:11)

فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ

அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர். (89:12)

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான். (89:13)

إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ

நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான். (89:14)

فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ

ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான். (89:15)

وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ

எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான். (89:16)

كَلَّا بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ

அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை. (89:17)

وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை. (89:18)

وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا

இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள். (89:19)

وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا

இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள். (89:20)

كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا

அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, (89:21)

وَجَاء رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا

உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது, (89:22)

وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். (89:23)

يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي

"என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான். (89:24)

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். (89:25)

وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ

மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான். (89:26)

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ

(ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! (89:27)

ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. (89:28)

فَادْخُلِي فِي عِبَادِي

நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. (89:29)

وَادْخُلِي جَنَّتِي

மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (89:30)

No comments: